செவ்வாய், 8 அக்டோபர், 2024

எழுத்தறிவித்தல் விழா -2024 விளம்பர பேனர்கள்



அறம் அறக்கட்டளையின் வித்யாரம்பம்-2023 நிகழ்வுக்காக

இந்த ஆண்டு, சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனத்தின் ஸ்பான்சரில்

ஃபிளெக்ஸ் விளம்பரங்கள்

10 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

(அளவு: 8 X 6 )

அவற்றில் சில...



ஈஸ்வரன் கோயில், திருப்பூர்

கோட்டை மாரியம்மன் கோயில், திருப்பூர்

பழைய பேருந்து நிலையம் அருகில், திருப்பூர்

$$$

விளம்பர உதவிக்கு ஏற்பாடு செய்த சகோதரர், சுதா விளம்பர நிறுவன உரிமையாளர் திரு. முத்துசாமி
அவர்களுக்கு நன்றி.

$$$



..

ஞாயிறு, 6 அக்டோபர், 2024

எழுத்தறிவித்தல் விழா- 2024 அறிவிப்பு




திருப்பூர்  அறம் அறக்கட்டளை,  பதினொன்றாம் ஆண்டாக  'வித்யாரம்பம்'  எனப்படும்  எழுத்தறிவித்தல் விழாவை திருப்பூரில் இந்த ஆண்டும் விஜயதசமி நன்னாளில் நடத்துகிறது. 

எழுத்தாளர்களைக் கொண்டே நமது குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பாரம்பரியச் சடங்கை தமிழகத்தில் மீட்டெடுக்க இந்த விழாவை அறம் அறக்கட்டளை நடத்தி வருகிறது. 

இந்த நிகழ்ச்சி முற்றிலும் இலவசம். தவிர, இந்நிகழ்வில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு ரூ. 200  மதிப்புள்ள சிலேட், பல்பம், வாய்பாடு, வண்ணப் படப் புத்தகம், கிரேயான்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. 

2012ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்வு 2019 வரை தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது. 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் கரோனா பெருந்தொற்றுக் கால தடை காரணமாகஇவ்விழாவை நடத்த முடியவில்லை. 2022, 2023 ஆண்டுகளில்  எழுத்தறிவித்தல் விழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்த ஆண்டும் (2024) இவ்விழா சிறப்பாக நடைபெற உள்ளது. 

இதுவரை எழுத்தாளர்கள் ஜெயமோகன்,  நாஞ்சில்நாடன்,   ஜோ.டி.குரூஸ்,  சு.வேணுகோபால், சுப்ரபாரதிமணியன், சூத்திரதாரி கோபாலகிருஷ்ணன், ஈரோடு மோகனரங்கன்,  பெருமாள்முருகன், தேவதாஸ்,  தஞ்சை வெ.கோபாலன், பேரா. ம.வே.பசுபதி, அரவிந்தன் நீலகண்டன், ம.வெங்கடேசன், ஜடாயு, பி.ஆர்.ஹரன், சுனில்கிருஷ்ணன், பி.ஆர்.மகாதேவன், ஹரன் பிரசன்னா,  கோ.மகுடேஸ்வரன், இசை, மரபின்மைந்தன் முத்தையா, பேரா. கனகசபாபதி, பேரா. இரா. ஶ்ரீநிவாசன், தொல்லியல் அறிஞர் ராமசந்திரன், திருப்பூர் கிருஷ்ணன், ராம.கோபால்ரத்தினம், கோவை ஓவியர் ஜீவானந்தம், பா.பிரபாகரன், கவிஞர் சிவதாசன், கண் மருத்துவர் எம்.எல்.ராஜா உள்ளிட்டோர் எழுத்தறிவித்தல் விழாவில் பங்கேற்று திருப்பூர்க் குழந்தைகளின் நாவில் ஓங்காரம் எழுதி, நெல்லில் அகரம் எழுதச்செய்து, வித்யாரம்பம் செய்வித்துள்ளனர். 

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 300 குழந்தைகள் இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர். இந்த ஆண்டு எழுத்தறிவித்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி உள்ளன. விழா விவரம்:

 

எழுத்தறிவித்தல் விழா 2024

 

நாள்: விஜயதசமி நன்னாள், 24.10.2024, செவ்வாய்க்கிழமை

நேரம்: காலை 8.00 மணி - 12.00 மணி.

இடம்: அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோயில்திருப்பூர்.

 

இந்த ஆண்டு எழுத்தறிவிப்போர்: 

1. ஶ்ரீ. ஆமருவி தேவநாதன்எழுத்தாளர்சென்னை

2. ஸ்ரீமதி. வித்யா சுப்பிரமணியம்,  எழுத்தாளர்சென்னை 

3. ஶ்ரீ. டாக்டர் கே.கே.ஆதவா (குகானந்தநாதர்)மணவளக்கலை பேராசிரியர்கோவை

4. ஶ்ரீ. டாக்டர் எஸ்.ரமேஷ்இசைக் கலைஞர்,  திருப்பூர்

5. ஶ்ரீ. எஸ்.ஏ.முத்துபாரதி, எழுத்தாளர், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், திருப்பூர்.


  • ஸ்ரீ. டாக்டர் ஏ.எஸ்.கிருஷ்ணன் (கோவை) வழங்கும் மாண்டலின் இசையுடன் விழா தொடங்கும்.

 

முன்பதிவுக்கு: 

சு.சத்தியநாராயணன்- 98940 31101

கு.சிவகுமார்- 98949 33877