செவ்வாய், 25 செப்டம்பர், 2018

நகர்ப்புற நக்ஸல்கள் - அரவிந்தன் நீலகண்டன் நிகழ்வு



நாட்டை நாசமாக்கத் துடிக்கும் நகர்ப்புற நக்ஸல்கள்
எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் பேச்சு.



திருப்பூர், செப். 23: இந்திய நாட்டின் இறையாண்மையை நாசம் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் நகர்ப்புற நக்ஸல்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது தேசபக்தியுள்ள ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என்று இந்துத்துவ சிந்தனையாளரும் எழுத்தாளருமான அரவிந்தன் நீலகண்டன் பேசினார்.

தேசிய சிந்தனைக் கழகமும் திருப்பூர் அறம் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய சிந்தனை அமர்வுக் கூட்டம், சாமிநாதபுரத்திலுள்ள அறம் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 23) மாலை நடைபெற்றது. அறம் அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் சி.சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளர் சேலம் பிரபாகர், லகு உத்யோக் பாரதி அமைப்பின் மாவட்டத் தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 



இந்த நிகழ்வில் அரவிந்தன் நீலகண்டன் பேசியதாவது: