அரவிந்தன் நீலகண்டன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரவிந்தன் நீலகண்டன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

நகர்ப்புற நக்ஸல்கள் - அரவிந்தன் நீலகண்டன் நிகழ்வு



நாட்டை நாசமாக்கத் துடிக்கும் நகர்ப்புற நக்ஸல்கள்
எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் பேச்சு.



திருப்பூர், செப். 23: இந்திய நாட்டின் இறையாண்மையை நாசம் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் நகர்ப்புற நக்ஸல்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது தேசபக்தியுள்ள ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என்று இந்துத்துவ சிந்தனையாளரும் எழுத்தாளருமான அரவிந்தன் நீலகண்டன் பேசினார்.

தேசிய சிந்தனைக் கழகமும் திருப்பூர் அறம் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய சிந்தனை அமர்வுக் கூட்டம், சாமிநாதபுரத்திலுள்ள அறம் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 23) மாலை நடைபெற்றது. அறம் அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் சி.சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளர் சேலம் பிரபாகர், லகு உத்யோக் பாரதி அமைப்பின் மாவட்டத் தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 



இந்த நிகழ்வில் அரவிந்தன் நீலகண்டன் பேசியதாவது:

திங்கள், 9 செப்டம்பர், 2013

ஊடகங்களும் மாற்றங்களும்: அரவிந்தன் நீலகண்டன் உரை

திருப்பூரில் ஆகஸ்டு-15 அன்று அறம் அறக்கட்டளை நிகழ்த்திய கருத்தரங்கில் ஊடகங்கள் குறித்து அரவிந்தன் நீலகண்டன் உரை நிகழ்த்தினார். பல சிந்தனைக்குரிய கருத்துக்களை அந்த உரையினூடாக அவர் தெரிவித்தார்.

போபால் விஷவாயு விபத்து காலத்தில் இந்திய ராணுவ வீரர்களுடன் களத்தில் இறங்கி பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிய இயக்கம் ஆர் எஸ் எஸ் மட்டுமே. அப்போதைய செய்தித் தாள்களில் கூட அந்த விஷயம் வெளிவந்தது. ஆனால் அதற்கான எந்த சான்றுகளும் அந்த இயக்கத்திடம் இல்லை என்பதைக் குறிப்பிட்டு ஆவணப்படுத்துதல் எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கினார். பின்னர் மேற்கத்திய எழுத்தாளர் ஒருவரால் போபால் விபத்து குறித்த விவரணங்கள் எவ்வாறு திரிக்கப் பட்டன என்பதையும் கூறினார்.

தமிழகத்தில் ஒடுக்கப் பட்டவர்களுக்கு ஈவேராவின் இயக்கம் எந்த விதத்திலும் உதவவில்லை; இந்தியாவிலேயே முதன் முதலில் உடுப்பி மாநகராட்சியில் மனிதக் கழிவை அகற்றுவதை தடைசெய்து சட்டம் இயற்றியது பாரதிய ஜனதா கட்சி தான் – இத்தகைய அரிய தகவல்களை எடுத்துரைத்தார்.

இன்றைக்கு இணையம், சமூக வலைத் தளங்கள் ஆகியவற்றீன் பரவலால் ஊடகம் மிகவும் ஜனநாயகப் படுத்தப் பட்டுள்ளது. இன்றைக்கு நாம் செய்திகளை அப்படியே படித்து நம்புபவர்களாக அல்ல, நாமே செய்திகளை உருவாக்குபவர்களாக இருக்கிறோம். இந்த வலிமையை தேச, சமூக முன்னேற்றத்திற்காக சரியான வழியில் பயன்படுத்த வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார்.

இந்த 20 நிமிட உரை முழுவதையும் கீழ்க்கண்ட வீடியோக்களில் காணலாம்.

பாகம் 1:

பாகம் 2
:


காண்க: தமிழ்ஹிந்து