செவ்வாய், 16 ஜூலை, 2013

சுதந்திர தினவிழா 2013- கல்லூரி மாணவருக்கு கருத்தரங்குகள்


சென்ற ஆண்டு திருப்பூரில் உள்ள 50-க்கு மேற்பட்ட பொதுநல அமைப்புகளை ஒருங்கிணைத்து 12 மணி நேர சுதந்திர தின விழா நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அறம் அறக்கட்டளை அமைக்கப்பட்டது. தற்போது, அறம் அறக்கட்டளை சார்பில், இந்த ஆண்டு சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த ஆண்டு, திருப்பூர், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் ஆகஸ்டு 15, வியாழக்கிழமை, காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, கல்லூரி மாணவர்களுக்கான  இரு கருத்தரங்குகளை நடத்தப்படுகிறது.  அது குறித்த விவரங்கள்:

  • சுதந்திர தின விழாவை வெறும் சடங்காகக் கொண்டாடாமல், உளப்பூர்வமாக, நாட்டின் வளர்ச்சிக்கு அதை பயன்படுத்தும் விதமாக இந்தக் கருத்தரங்குகளை அறம் அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. 

  • இக்கருத்தரங்குகளில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், திருப்பூரில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் சுதந்திர தினவிழாவில் இடம் பெறும் கருத்தரங்கில் தங்கள் உரைகளை நிகழ்த்த அழைக்கப்படுவார்கள். 

1. கருத்தரங்குகளின் விவரம்:


இரு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறும். அவை:

1. இளைஞர்களின் இதயக்குரல்:


தற்போது நாடு சந்தித்துவரும் சவால்களுக்கு என்ன தீர்வு என்பது குறித்த மாணவ சமுதாயத்தினரின் கருத்துக்களைத் தொகுக்கும் விதமாக இத்தலைப்பில் கருத்தரங்கு நடைபெறும். இதன் துணைத் தலைப்புகள்:
  • அ) அடுத்து நாட்டின் ஆட்சியாளராக வருபவரிடம் எதிர்பார்ப்பது என்ன?
  • ஆ) நமது தேர்தல் முறைகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.


2. திருப்பூரின் வளர்ச்சிக்கு ஆலோசனைகள்:


தமிழகத்தின் புதிய மாவட்டமான திருப்பூரின் வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்பது குறித்த மாணவ சமுதாயத்தினரின் கருத்துகளைத் தொகுக்கும் விதமாக இத்தலைப்பில் கருத்தரங்கு நடைபெறும். இதன் துணைத் தலைப்புகள்:

  • அ) உள்கட்டமைப்பின் தேவைகள்.
  • ஆ) தொழில்துறை வளர்ச்சி
  • இ) விவசாயத்தைக் காப்போம்!
  • ஈ) சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்
  • உ) தன்னிறைவு அடைவோம்!

2. கருத்தரங்குகளின் விதிமுறைகள்:


  • அ) விருப்பமுள்ள மாணவ மாணவிகள் தங்கள் பெயர்களை கல்லூரி விவரங்களுடன் தொலைபேசியில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். 
  •  முன்பதிவு செய்வதற்கான தொலைபேசி எண்: 98940 31101 
  • முன்பதிவு செய்வதற்கு கடைசிநாள்: ஜூலை 25.
  • ஆ) இந்தக் கருத்தரங்குகளில் பங்கேற்பவர்கள் தங்கள் கருத்துக்களை எழுத்துவடிவில், முன்னதாகவே ஜூலை 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதில் கல்லூரி முதல்வரின் ஒப்புதல் இணைக்கப்பட வேண்டும்.
  • இ) இரு கருத்தரங்குகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே மாணவர்கள் கலந்துகொள்ள முடியும். மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள தலைப்பை குறிப்பிட்டு முன்பதிவு செய்வதும், கட்டுரைகளை அனுப்புவதும் முக்கியமானதாகும். உதாரணமாக, முதல் தலைப்பில் இரண்டாம் பிரிவைத் தேர்வு செய்பவர் “1-ஆ” என்று குறிப்பிட வேண்டும்.
  • ஈ) தனிநபர் மீதான தாக்குதல்கள், அரசியல் சார்பு நிலைப்பாடுகள், வெறுப்பை உமிழும் சொற்கள் தவிர்க்கப்பட வேண்டும். 
  • உ) கருத்தரங்கில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கால அளவு: 10 நிமிடங்கள்: 

3. கருத்தரங்குகளின் நடைமுறை:


  • அ) மாணவ மாணவியரின் கட்டுரைகளை ஆய்வு செய்ய கல்லூரிப் பேராசியர்கள் கொண்ட இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அவற்றைப் பரிசீலித்து கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு விடுப்பார்கள்.
  • ஆ) இரு கருத்தரங்குகளும் இரு வேறு இடங்களில் தனித்தனியே நடைபெறும். அந்த இடங்கள் குறித்த விவரம், கருத்தரங்கு தினத்துக்கு இரு நாட்கள் முன்னதாக அறிவிக்கப்படும்.
  • இ) கருத்தரங்கிற்கு மாணவ மாணவிகளே தங்கள் சொந்த ஏற்பாட்டில் வந்து செல்ல வேண்டும். 
  • ஈ) இரு கருத்தரங்குகளிலும் தங்கள் கருத்துக்களைத் திறம்பட முன்வைக்கும் மாணவ மாணவியர், திருப்பூரில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் விருந்தினர்கள் முன்னிலையில் தங்கள் கருத்துக்களை முன்வைக்க அழைக்கப்படுவர்.
  • உ) கருத்தரங்கில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்.

4. மேலும் விவரங்களுக்கு:


சுதந்திர தினவிழா, கருத்தரங்குகள் குறித்து மேலும் அறிய, கீழ்க்கண்ட முகவரியை அணுகலாம்:

ஆடிட்டர் திரு. C.சிவசுப்பிரமணியன் (தலைவர்),

அறம் அறக்கட்டளை, திருப்பூர் (பதிவு எண்: 1432/2012),
36/24 - பின்னி காம்பவுண்ட் மெயின் ரோடு, குமரன் சாலை, திருப்பூர் – 641601,

 போன்: 94437 04858. 
 மின்னஞ்சல்: aramtirupur@gmail.com 
 வலைப்பூ: http://aramtirupur.blogspot.in 
 முகநூல்: http://www.facebook.com/idcc.tirupur

அலைபேசியில் தொடர்பு கொள்க:

திரு. S.நாராயணன்: 98940 31101

திரு. G.ஹரிபிரசாத்: 99948 82748

திரு. பாலசுப்பிரமணியம்: 99444 04499

திரு. D.சீனிவாசன்: 99446 66677

1 கருத்து: