ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

அறம் வித்யாரம்பம் -2022 விழா அறிவிப்பு



 

திருப்பூர் அறம் அறக்கட்டளையின் 

ஒன்பதாம் ஆண்டு எழுத்தறிவித்தல் விழா
_____________________________________________

திருப்பூர் அறம் அறக்கட்டளை, ஒன்பதாம் ஆண்டாக 'வித்யாரம்பம்' எனப்படும் எழுத்தறிவித்தல் விழாவை திருப்பூரில் இந்த ஆண்டும் விஜயதசமி நன்னாளில் நடத்துகிறது.

எழுத்தாளர்களைக் கொண்டே நமது குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பாரம்பரியச் சடங்கை தமிழகத்தில் மீட்டெடுக்க இந்த விழாவை அறம் அறக்கட்டளை நடத்தி வருகிறது.

இந்த நிகழ்ச்சி முற்றிலும் இலவசம். தவிர, இந்நிகழ்வில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு ரூ. 160 மதிப்புள்ள சிலேட், பல்பம், வாய்பாடு, வண்ணப் படப் புத்தகம், கிரேயான்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

2012ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்வு 2019 வரை தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது. 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் கரோனா பெருந்தொற்றுக் கால தடை காரணமாக, இவ்விழாவை நடத்த முடியவில்லை. இந்த ஆண்டு எழுத்தற்வித்தல் விழா வழக்கமான உற்சாகத்துடன் நிகழ உள்ளது.

இதுவரை எழுத்தாளர்கள் ஜெயமோகன், நாஞ்சில்நாடன், ஜோ.டி. குரூஸ்,  சு.வேணுகோபால், சுப்ரபாரதிமணியன், சூத்திரதாரி கோபாலகிருஷ்ணன், ஈரோடு மோகனரங்கன், பெருமாள்முருகன், தேவதாஸ்,  தஞ்சை வெ.கோபாலன், பேரா. ம.வே.பசுபதி, அரவிந்தன் நீலகண்டன், ம.வெங்கடேசன், ஜடாயு, பி.ஆர்.ஹரன், சுனில்கிருஷ்ணன், பி.ஆர்.மகாதேவன், ஹரன் பிரசன்னா,  கோ.மகுடேஸ்வரன், இசை, மரபின்மைந்தன் முத்தையா, பேரா. கனகசபாபதி, பேரா.ஶ்ரீநிவாசன், தொல்லியல் அறிஞர் ராமசந்திரன், திருப்பூர் கிருஷ்ணன், ராம.கோபால்ரத்தினம் உள்ளிட்டோர் எழுத்தறிவித்தல் விழாவில் பங்கேற்று திருப்பூர்க் குழந்தைகளின் நாவில் ஓங்காரம் எழுதி, நெல்லில் அகரம் எழுதச்செய்து, வித்யாரம்பம் செய்வித்துள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 300 குழந்தைகள் இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர். இந்த ஆண்டு எழுத்தறிவித்தலுக்கான ஆயத்தப் பணிகள் இன்று (மகாளய அமாவாசை) துவங்கி உள்ளன. விழா விவரம்:

எழுத்தறிவித்தல் விழா 2022

நாள்: விஜயதசமி நன்னாள், 05.10.2022, புதன்கிழமை
நேரம்: காலை 9.00 மணி - 12.00 மணி.
இடம்: அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோயில், திருப்பூர்.

இந்த ஆண்டு எழுத்தறிவிப்போர்:

1. ஶ்ரீ. வே.ஜீவானந்தன், ஓவியர், கோவை
2. ஸ்ரீ. ஒத்திசைவு வெ.ராமசாமி, கல்வியாளர், பெங்களூரு
3. ஶ்ரீ. வி.வி.பாலா, ஆசிரியர், யுவபாரதி, சென்னை
4. ஶ்ரீ. மது.ஜெகதீஷ், சிற்பப் புகைப்படக் கலைஞர், பொள்ளாச்சி
5. ஶ்ரீமதி. சி.குமரேஸ்வரி, நல்லாசிரியர், திருப்பூர்.
 
_________________________________________________________

முன்பதிவுக்கு:

கவிஞர் ஶ்ரீ.பக்தவத்சலம்- 98422 27505
கு.சிவகுமார்- 98949 33877


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக