புதன், 1 அக்டோபர், 2025

எழுத்தறிவித்தல் விழா- 2025 அழைப்பிதழ்

 


திருப்பூர்  அறம் அறக்கட்டளைபன்னிரண்டாம் ஆண்டாக  'வித்யாரம்பம்எனப்படும்  எழுத்தறிவித்தல் விழாவை திருப்பூரில் இந்த ஆண்டும் விஜயதசமி நன்னாளில் நடத்துகிறது

எழுத்தாளர்களைக் கொண்டே நமது குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பாரம்பரியச் சடங்கை தமிழகத்தில் மீட்டெடுக்க இந்த விழாவை அறம் அறக்கட்டளை நடத்தி வருகிறது

இந்த நிகழ்ச்சி முற்றிலும் இலவசம். தவிர, இந்நிகழ்வில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு ரூ. 200  மதிப்புள்ள சிலேட், பல்பம், வாய்பாடு, வண்ணப் படப் புத்தகம், கிரேயான்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன

2012ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்வு 2019 வரை தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது2020, 2021 ஆகிய ஆண்டுகளில் கரோனா பெருந்தொற்றுக் கால தடை காரணமாகஇவ்விழாவை நடத்த முடியவில்லை2022ஆம் ஆண்டிலிருந்து,   எழுத்தறிவித்தல் விழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்த ஆண்டும் (2025) இவ்விழா சிறப்பாக நடைபெற உள்ளது. 

இதுவரை எழுத்தாளர்கள் ஜெயமோகன்நாஞ்சில்நாடன்,   ஜோ.டி.குரூஸ்சு.வேணுகோபால், சுப்ரபாரதிமணியன், சூத்திரதாரி கோபாலகிருஷ்ணன், ஈரோடு மோகனரங்கன்பெருமாள்முருகன், தேவதாஸ்தஞ்சை வெ.கோபாலன், பேரா. .வே.பசுபதி, அரவிந்தன் நீலகண்டன், .வெங்கடேசன், ஜடாயு, பி.ஆர்.ஹரன், சுனில்கிருஷ்ணன், பி.ஆர்.மகாதேவன், ஹரன் பிரசன்னாகோ.மகுடேஸ்வரன், இசை, மரபின்மைந்தன் முத்தையா, சத்யப்பிரியன், பேரா. கனகசபாபதி, பேரா. இராம. ஶ்ரீநிவாசன், தொல்லியல் அறிஞர் ராமசந்திரன், திருப்பூர் கிருஷ்ணன், ராம.கோபால்ரத்தினம், கோவை ஓவியர் வே.ஜீவானந்தன், பா.பிரபாகரன், கவிஞர் சிவதாசன், கண் மருத்துவர் எம்.எல்.ராஜா, ஆமருவி தேவநாதன், வித்யா சுப்பிரமணியம்,  டாக்டர் கே.கே.ஆதவா (குகானந்தநாதர்), இசைக்கலைஞர் டாக்டர் எஸ்.ரமேஷ் எஸ்..முத்துபாரதி உள்ளிட்டோர் எழுத்தறிவித்தல் விழாவில் பங்கேற்று திருப்பூர்க் குழந்தைகளின் நாவில் ஓங்காரம் எழுதி, நெல்லில் அகரம் எழுதச்செய்து, வித்யாரம்பம் செய்வித்துள்ளனர்

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 300 குழந்தைகள் இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர். இந்த ஆண்டு எழுத்தறிவித்தல் விழா இரு இடங்களில் நிகழ்கிறது.  அது தொடர்பான விவரங்கள்: 

 

 


எழுத்தறிவித்தல் விழா 2025 - 

நாள்விஜயதசமி நன்னாள், 02.10.2025, வியாழக்கிழமை

நேரம்காலை 8.00 மணி12.00 மணி.

 எழுத்தறிவிப்போர்: 

1. ஶ்ரீ.  சோ.தர்மன்சாஹித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர்கோவில்பட்டி

2. ஸ்ரீ. மதுசூதனன் பராங்குசம், ஆன்மிகச் சிந்தனையாளர்

3. ஶ்ரீ. ஸ்ரீமதி (வினோத்குமார்)எழுத்தாளர்

முன்பதிவுக்கு: 

  • கு.சிவகுமார் 98949 33877
  •  ரமேஷ் கவின் – 80986 56927

 

$$$

 


எழுத்தறிவித்தல் விழா 2025 -

நாள்விஜயதசமி நன்னாள், 02.10.2025, வியாழக்கிழமை

நேரம்காலை 8.00 மணி12.00 மணி.

இடம்அருள்மிகு திருமுருகநாத சுவாமி திருக்கோயில்திருமுருகன்பூண்டி.

எழுத்தறிவிப்போர்: 

1. ஶ்ரீ.  வே.ஜீவானந்தன், ஓவியர்கோவை

2.ஸ்ரீ. கே.கந்தசாமி, எழுத்தாளர், கோவை

3. ஶ்ரீ. சத்யப்பிரியன் (இரா.பிரபாகர்)எழுத்தாளர், சேலம்

முன்பதிவுக்கு: 

  • சு.சத்யநாராயணன் 98940 31101
  •  ஸ்ரீ.பக்தவத்சலம் – 98422 27505

 

$$$