சனி, 30 மார்ச், 2013

காந்தி நினைவுதின நிகழ்ச்சி



கடந்த ஜனவரி 30-ம் தேதி காலை, திருப்பூர், பழையநகர், மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் காந்தி நினைவு நாள் நிகழ்ச்சி  நடைபெற்றது.

மாணவர்களிடையே காந்தியை நினைவுகூரும் வகையிலான ஒவியப்போட்டி நடத்தப்பட்டது. ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு (சத்திய சோதனை நூல்) வழங்கப்பட்டது. அறம் அறக்கட்டளை தலைவர் ஆடிட்டர் சிவசுப்பிரமணியன், சர்வோதய ஊழியர் சங்க முன்னாள் தலைவர் வீரப்பிரகாசம் உள்ளிட்டோர் பேசினர். காந்திஜி படத்திற்கு அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. 
பள்ளி மாணவர்களின் படைப்பூக்கத்தை வளர்க்கும் விதமாக ஓவியபோட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற நூறு பேருக்கு சான்றிதழ்கள் அறம்  அறக்கட்டளையால் வழங்கப்பட்டன.
அந்த விழாவின் படங்கள் கீழே கீழே...








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக