ஞாயிறு, 13 அக்டோபர், 2013

எழுத்தறிவித்தல் விழா- தினமணி செய்தி


நாளை எழுத்தறிவித்தல் விழா
அறம் அறக்கட்டளை நடத்துகிறது


திருப்பூர், அக். 12:  விஜயதசமியன்று அறம் அறக்கட்டளை நடத்தும் எழுத்தறிவித்தல் விழா, திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் திங்கள்கிழமை (நாளை) நடைபெறுகிறது.

இதுகுறித்து திருப்பூர் அறம் அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் சி.சிவசுப்பிரமணியன், செயலாளர் கு.சிவகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விஜயதசமியன்று குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிப்பதைத் துவங்குவது நமது மரபு. அதிலும் கல்வித்துறையில் தேர்ந்தவர்களும் எழுத்தாளர்களும் குழந்தைகளின் நாவில் அகரம் எழுதி கல்வியைத் துவங்கிவைப்பதால் அவர்களின் வாழ்க்கை சிறப்படையும் என்பது நம்பிக்கை.

இந்தப் பாரம்பரிய நிகழ்வைப் புதுப்பிக்கும் விதமாக, திருப்பூரில் சென்ற ஆண்டு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன், பேராசியர் ப.கனகசபாபதி ஆகியோர் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் செய்துவைத்தனர். இந்த ஆண்டும், அதேபோல எழுத்தாளர்களைக் கொண்டு வித்யாரம்பம் செய்யும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் திங்கள்கிழமை காலை 8 மணி முதல் 11 மணி வரை எழுத்தறிவித்தல் விழா நடைபெறுகிறது. இதனை கோவில் அர்ச்சகர் எஸ்.என்.நடராஜ குருக்கள் துவங்கிவைக்கிறார்.

இந்நிகழ்வில்,  'ஆழிசூழ் உலகு' புதினத்தை எழுதிய எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ்,  சாஸ்திரா பல்கலைக்கழக பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன், வரலாற்று ஆய்வாளர் அரவிந்தன் நீலகண்டன், தமிழ்ஹிந்து இணைய எழுத்தாளர் ஜடாயு, ஹிந்துத்துவம் டுடே இணைய எழுத்தாளர் ம.வெங்கடேசன், சுற்றுச்சூழல் ஆர்வலர் சரஸ்வதி ஆகியோர் பங்கேற்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்துவைக்கின்றனர்.

இந்நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது. இந்நிகழ்வில் தங்கள் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்க விரும்புவோர், ஹரிபிரசாத் (99948 82748), சிவகுமார் (98949 33877), பாலசுப்பிரமணியன் (99444 04499) ஆகியோரைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.



- தினமணி (13.10.2013)

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக